வணக்கம் சொந்தங்களே ... நாம் அனைவரும் ஒரே இனம் ... தேவர் இனம் ...... முக்குலத்தோரின் ஒற்றுமைக்காக தொடங்கப்பட்ட அமைப்பு இ து. ஏழு வருடமாக தேவர் இனத்தின் ஒற்றுமைக்கும் , முன்னேற்றத்திற்கும் போரடிக்கொண்டிருக்கோம் ... நம் தேவர் இனத்தில் ஒற்றுமை ஏற்ப்படுத்துவது நம் அனைவரின் கடமை அல்லவா ??? அதற்காக ஒரு முயற்சியே இந்த குரூப் .. நம் செயல்பாட்டை பரிமாறவும் ,நம் உணர்வை வளர்க்கவும் , நம்மை உயர்த்தவும் ,நம் இன வரலாற்றை தெரிந்துக்கொள்ளவும் இந்த குழுமத்தை தொடங்கி இரண்டாவது ஆண்டாக நடத்தி வருகிறோம் ... இங்கு கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவு கிடையாது. அனைவரும் தேவரே.... பிரிந்து இருக்கும் முக்குலத்தோரை ஒன்றிணைத்து தேவர் இனத்திற்காக போராட வைப்பதே இந்த அமைப்பின் நோக்கம்... தனிப்பட்ட உட் பிரிவுகள் சொல்லிக்கொண்டு என்ன சாதிச்சோம் ????... இனி என்ன சாதிக்க போகிறோம். ????... ஒன்று படுவோம் நமது உரிமைக்காக போராடுவோம்... உயர்வடைவோம் ,,,,, நமது ஒற்றுமைக்கு தேவையான கருத்துகளையும் , நமது முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துகளையும், நமது வரலாற்று குறிப்புகளையும் இங்கு பதிவு செய்யுங்கள்..... நம் இன மக்களுக்கு வேலை வாய்ப்பிற்கும், கல்விக்கும் உதவி செய்யுங்கள்.... வன்கொடுமை சட்டத்தை நீக்க நம் அமைப்பின் சார்பில் பல போராட்டம் நடத்தியுள்ளோம்.... இந்த சட்டத்தினால் பாதிக்கப்படும் நம் உறவுகளுக்கு கண்டிப்பாக எப்போதும் துணை நிற்ப்போம்.... நாங்களோ எங்கள் தலைவரோ பெரிய பணக்காரர்கள் அல்ல... ஆனால் எங்களால் முடிந்தவரை தேவரினத்துக்காக போராடுவோம்... அவசியம் ஏற்பட்டால் எங்கள் உயிரையும் தேவரினத்திற்க்காக கொடுப்போம்... நம் அமைப்பு நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.... நீங்கள் இந்த அமைப்பில் இல்லையென்றாலும், இந்த அமைப்பிற்கும் நம் இனத்திற்கும் துணையாக இருக்கவேண்டும் என கேட்டுகொள்கிறோம்... நம் மக்களுக்கு முக்குலத்தின் ஒற்றுமையை ஏற்படுத்த உணர்த்துவோம்... நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை ஒழிப்போம்........ இதன் தலைவர் முக்குலத்தின் காவலர் அஞ்சா நெஞ்சன் திரு ஆறு. சரவணன் தேவர் அவர்கள்... தன்னலம் இல்லாதவர், நம் இன மக்களுக்காக தன் உயிரையும் துச்சமாக மதிக்க கூடியவர்..... நம் அமைப்பினால் நடத்தப்படும் இந்த குழுமத்தின் விதிகள் ; தனிப்பட்ட உள்பிரிவை போற்றுவதற்கும் , தூற்றுவதர்க்கும் இங்கே அனுமதி இல்லை நமது ஒற்றுமைக்கு தேவையான அனைத்து கருத்தையும் இங்கே பதியலாம் பிரிவினைக்கு காரணமாக அமையும் எந்த கருத்துக்கும் இங்கே அனுமதி கிடையாது நம் இனத்தின் ஒற்றுமைக்கு தேவையான அரசியல் பதிவுகள் மட்டுமே இங்கே ஏற்கப்படும் நம் இனத்தில் உள்ள தனிப்பட்ட ஒருவரின் சண்டையை இங்கே பதிய வேண்டாம் இங்கு வந்தால் அனைவரும் தேவரே ... ஆபாச வார்த்தைகள் ,சொந்தங்களை புண்படுத்தும் வார்த்தைகள் நீக்கப்படும் ... தேவர் இனத்தின் தலைவர்கள் யாரையும் விமர்சிக்க வேண்டாம் ...உள்பிரிவை தூக்கி பிடிக்கும் எந்த குழுமத்தின் செயல்பாடையும் இங்கே பகிர வேண்டாம் தெரிந்தே ,வேண்டும் என்றே இங்கே தவறு பண்ணுறவங்களுக்கு ஒரு முறையும் ,தெரியாமல் தவறு பண்ணுறவங்களுக்கு மூன்று முறை எச்சரிக்கை கொடுப்போம் ..மீறினால் குழுமத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்..... கட்டுப்பாடு இருக்க குழுமம் தான் ஒற்றுமையோடு இருக்கும் ....இங்கையாவது ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதால் தான் இவ்வளவு கட்டுப்பாடு .. உள்ப்பிரிவை வைத்து இங்கே பதிந்தால் அது முக்கியமான பதிவோ ,நல்ல பதிவோ எப்படி இருந்தாலும் ,யாரு பதிந்தாலும் உடனே நீக்கப்படும் . இதில் எந்த மாற்றமும் இல்லை வரலாறை சொல்லும்போது தேவர் [ உள்ப்பிரிவு] இப்படி பதியலாம் ...மற்றபடி எந்த காரணத்திற்கும் நமது உள்ப்பிரிவை இங்கு பயன்படுத்த வேண்டாம் நமது கொள்கைகள் மற்றும் நம் கோரிக்கைகளில் முக்கியமானது >>>>>; முக்குலத்தோரை தேவர் இனமாக அறிவித்து ஒரே வகுப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் . மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் அய்யாவின் பெயரை வைக்க வேண்டும் . தேவர் ஜெயந்தியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் .. தேவர் அய்யாவின் படத்தை அனைத்து எல்லா அரசு அலுவலங்களிலும் வைக்க வேண்டும் . அனுமதி கேட்ட இடத்தில உடனே தேவர் அய்யா சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் தேவர் இனத்தை மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் கொண்டுவர வேண்டும் ... பசும்பொன் தேவர் அய்யா , மருது பாண்டியர், பூலித்தேவன் , வேலு நாச்சியார் ஆகியோரின் நாட்டுப்பற்றையும், விடுதலை போராட்டத்தையும் பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் நம் முன்னோர்கள் மூவேந்தர்கள் சேர சோழ பாண்டியர்கள் ஆசிகளோடு , பசும்பொன் தேவர் அய்யா , மாவீரர் புலிதேவன் ,மாமன்னர் இராஜா ராஜா சோழன் தேவர் , மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் , வீர தாய் வேலு நாச்சியார் ,மூக்கையா தேவர் ஆகிய நம் முக்குலத்து தெய்வங்கள் ஆசிகளோடும் வாருங்கள் நம் தேவர் இனம் காப்போம் .... வாழ்க நம் முக்குலம் .. வளர்க நம் ஒற்றுமை ... ஒற்றுமையோடு இருப்போம் தேவர் இனம் காப்போம் நிமிர்ந்து நில் ,துணிந்து செல்..போராடு இது நாம் ஆண்ட பூமி நம்மை அடக்க முடியாது நம் உரிமைகளை தடுக்கும் அதிகாரம் எவனுக்கும் இல்லை ஒன்றுபடுவோம் நம் உரிமைக்காக போராடுவோம் உயர்வடைவோம் சொந்தங்கள் அனைவரின் புரிதலுக்கும் நன்றி

அய்யா கலப்பு திருமணம் பண்ற புரட்சி பாய்ஸ் ... இதை கொஞ்சம் படியுங்கள்

... தினமலர் ல அன்புடன் அந்தரங்கம் பகுதியில வந்தது....

மதிப்பிற்குரிய அம்மாவிற்கு,
எங்களுடையது நடுத்தர குடும்பம். அப்பா அரசு அதிகாரி. அம்மா இல்லத்தரசி. இரு சகோதரிகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. அடுத்தது நான் தான்.
அப்பா மிகவும் நல்லவர். கஷ்டப்பட்டு வாழ்வில் முன்னேறியவர். அம்மாவின் குணத்தை பொறுத்துக் கொண்டு, அதற்கேற்றார் போல், வாழ்க்கை நடத்தியவர். பொறுமைசாலி; அவ்வப்போது மது அருந்துவார்.
அம்மா வசதியான குடும்பத்தில் பிறந்தவர். மிகவும் கோபப்படுவார். அம்மாவை பார்த்தாலே பயம் தான் வரும். நான் கொஞ்சம் துடுக்காக பேசுவேன். ஆண்களிடம் சாதாரணமாக பேசுவேன்; இதெல்லாம் என் அம்மாவிற்கு பிடிக்காது.
என் அக்காக்களை விட, நான் நன்றாக இருப்பேன் என்பதால், என் அம்மாவிற்கு, என் மேல் மிகுந்த சந்தேகம். நான் அவர்களை அசிங்கப்படுத்தவே பிறந்திருப்பதாக கூறுவார். இது போதாதென்று, எனக்கு வலிப்பு நோயும் உள்ளது.
நான், தற்போது, எம்.ஏ., பி.எட்., எம்.பில்., படித்து, தனியார் கல்லூரியில், ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றுகிறேன். நல்ல கல்வி, பொருளாதார சுதந்திரம் இருந்தும், வீட்டில், நான் அழாத நாள் இல்லை.
கல்லூரியில் படிக்கும் போது, ஒருவனை காதலித்தேன். நண்பர்களாக ஆரம்பித்த பழக்கம்; என் நண்பர்களின் கேலி, கிண்டலால் காதலாகியது. அவன் தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால், உடனடியாக பதிவுத் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினான். அப்படி செய்தால், நம்மை யாரும் பிரிக்க முடியாது என்றான்.
அப்போதிருந்த நிலையில், அவன் சொன்னதையெல்லாம் செய்தேன். அவன் ஆசைக்கு இரையானேன். அது, "கலப்பு திருமணம்' என்பதால், வேலை வாய்ப்பகத்தில், பதிந்து வைத்தால், வேலை வாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும் என்று கூறினர். எனவே, இருவரும், ஐ.சி.எம்., கேட்டகிரி என்று பதிந்துள்ளோம்.
இந்நிலையில், என் மொபைலுக்கு, ஒரு ராங் நம்பரிலிருந்து போன் வந்ததால், என்னை சந்தேகப்பட்டான். நான் எவ்வளவு புரிய வைக்க முயற்சி செய்தாலும், அவன் நம்பவில்லை. பதிவுத் திருமணம் செய்த பின், என்னை அடிக்கடி திட்டி, சண்டையிட்டான். எல்லாவற்றையும் பொறுத்து கொண்டேன்.
அவன் எந்த வேலைக்கும் செல்லாமல், என்னிடம், "உனக்கு தேவையான நகை, வீட்டுப்பொருட்கள்' எல்லாவற்றையும் வாங்கி, இப்போதே சேர்த்து வை. உன் சம்பளத்தை வீட்டில் கொடுக்க வேண்டாம். பின்னால் நமக்கு தேவைப்படும்' என்று கூறினான்.
என் வீட்டில் என்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால், அவன் கூறியபடி, நானும் சேமித்தேன். அதையும் அவ்வப்போது, வாங்கி செலவு செய்தான்.
இந்நிலையில், ஒருநாள் என்னை மிகவும் திட்டி, சண்டையிட்டு பேசவில்லை. நான் தொடர்பு கொண்டால், எதுவும் பதில் இல்லை. நானும் பேசாமலிருந்தேன். ஐந்து மாதமாக எந்த தொடர்பும் இல்லை. அப்போதுதான், அவன் சுயரூபம் தெரிந்தது. இப்போது என் பிரச்னை என்னவென்றால், அவன் என்னை, பயன்படுத்தியிருக்கிறான் என்று தெரிந்து கொண்டேன். இனி, யாரையும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. வாழ்நாள் முழுவதும், தனியாக வாழ்ந்து, என் தம்பி, தங்கையை நன்றாக படிக்க வைத்து, ஏழை பிள்ளைகள் படிப்பிற்கு உதவ வேண்டும்.
தனியாக வாழ முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால், வழி இல்லை. இனி எப்படி இருக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. இப்போது, "ஐ.சி.எம்., சீனியாரிட்டி' மூலம் அரசாங்க பணிக்கு, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். (பி.டி.அசிஸ்டென்ட்ஸ்) வரும் டிசம்பர் 30க்குள், பணி கிடைக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஐந்து மாதத்திற்கு பின், திடீரென்று, "கலப்பு திருமண' உதவித் தொகை வந்துள்ளது. நீ வந்தால் தான் தருவர் என்றான். நானும் சென்று வாங்கினேன்; 20 ஆயிரம் தந்தனர். 10 ஆயிரம் பாண்டாகவும், 10 ஆயிரம் செக்காகவும் என் பெயரில் வந்தது. "செக்'கை உடனே மாற்றி, பணத்தை அவனிடமே தந்து விட்டேன். 10 ஆயிரம் "பாண்ட்' ஐந்து வருடம் கழித்து வாங்கிக் கொள்ளலாம் என்றனர். அப்போதும், நான், அவனிடம் வேறு எதுவும் பேசவில்லை. இன்று வரை ஏதாவது பேசினாலும், சண்டை தான்.
இந்த விஷயம் எதுவும் என் வீட்டிற்கு தெரியாது. இப்போது இவனிடம் இருந்து, நான் எப்படி மீள்வது? என் வீட்டிற்கு தெரியாமல், "விவாகரத்து' வேண்டும் என்று கேட்டால் தர முடியாது என்கிறான். இவையெல்லாம், என் வீட்டிற்கு தெரிந்தால், அப்பா தாங்க மாட்டார். அம்மா என்னை கொன்று விடுவார். வீட்டில் இல்லாத நிம்மதி, இவனிடம் கிடைக்கும் என்று நம்பி, இவனை காதலித்தேன். ஆனால், இவனோ, என்னை பயன்படுத்தி விட்டு, இப்போது மேலும், கொடுமைப்படுத்துகிறான்.
* எனக்கு என் வீட்டிற்கு தெரியாமல் இவனிடம் இருந்து, "விவாகரத்து' வாங்க என்ன வழி?
* "ஐ.சி.எம்., சீனியாரிட்டி' மூலம் கிடைக்கவிருக்கும் வேலைக்கு, விவாகரத்தால், ஏதாவது பாதிப்பு வருமா?
* உதவித்தொகை பெற்றதில், மீதம் 10 ஆயிரம் பாண்ட், அவனிடம் உள்ளது. அது எனக்கு தேவையில்லை என்ற போதிலும், அதனால், ஏதாவது பிரச்னை வருமா?
என் நண்பர்கள் அனைவரும், தற்போது, எனக்காக சங்கடப்படுகின்றனர். விவாகரத்து கேட்டதற்கு, நான் பணிபுரியும் இடத்தில், என்னை பற்றி தவறாக கூறி விட்டான். நல்ல வேளையாக நான், பணிபுரிந்தது வெளியூர் என்பதால், என் வீட்டாருக்கு, எதுவும் தெரியவில்லை. நான் அந்த வேலையை விட்டு விட்டு வந்து விட்டேன். மேலும், என்னை அசிங்கப்படுத்தப் போவதாக கூறுகிறான்; பயமாக உள்ளது. எப்போது என்ன நடக்கும் என்று தெரியவில்லை. வெளியில் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இதே நிலை நீடித்தால், இந்த விஷயம் வெளியில் தெரிவதற்கு முன், நான் சாவதை தவிர, வேறு வழியில்லை. அவனிடமிருந்து, மீண்டு வர வழி கூறுங்கள்.
குறிப்பு: "கல்யாண சான்றிதழ்' என்னிடம் உள்ளது. அதை கேட்டு மிரட்டுகிறான்.
இப்படிக்கு,
பெயர் வெளியிட விரும்பாத அபலைப்பெண்.

3 comments:

  1. Hi! Akka, En peyar Aravindh.. Nan B.sc Final Year Padikiran.. Akka Nenga V2ku Theriya Kudathunu Avanga Kasta Paduvanganu Ninaikiringa Correct than.. Unga v2la Soltrathu than akka correct Nenga daily Kastapadavendam akka.. v2la sonnathum Romba Thittuvanga! Yellam 2 Month la sari Aagirum.. Nenga Yellarukum social Service Pantratha Sonninga! Atha Nenga Pannunga Manasuku Nimmathi Kidaikum! Nenga Yentha Thappana Mudivukum Pogathinga akka.. V2la sollirunga divice Apply Pannirunga! Marriage certificate Avanga ta Kodukathinga! Akka Na Yethum thappa soliruntha sorry1

    ReplyDelete
  2. vetla pesunga

    ReplyDelete
  3. vetla pesunga

    ReplyDelete