வணக்கம் சொந்தங்களே ... நாம் அனைவரும் ஒரே இனம் ... தேவர் இனம் ...... முக்குலத்தோரின் ஒற்றுமைக்காக தொடங்கப்பட்ட அமைப்பு இ து. ஏழு வருடமாக தேவர் இனத்தின் ஒற்றுமைக்கும் , முன்னேற்றத்திற்கும் போரடிக்கொண்டிருக்கோம் ... நம் தேவர் இனத்தில் ஒற்றுமை ஏற்ப்படுத்துவது நம் அனைவரின் கடமை அல்லவா ??? அதற்காக ஒரு முயற்சியே இந்த குரூப் .. நம் செயல்பாட்டை பரிமாறவும் ,நம் உணர்வை வளர்க்கவும் , நம்மை உயர்த்தவும் ,நம் இன வரலாற்றை தெரிந்துக்கொள்ளவும் இந்த குழுமத்தை தொடங்கி இரண்டாவது ஆண்டாக நடத்தி வருகிறோம் ... இங்கு கள்ளர் மறவர் அகமுடையார் என்ற பிரிவு கிடையாது. அனைவரும் தேவரே.... பிரிந்து இருக்கும் முக்குலத்தோரை ஒன்றிணைத்து தேவர் இனத்திற்காக போராட வைப்பதே இந்த அமைப்பின் நோக்கம்... தனிப்பட்ட உட் பிரிவுகள் சொல்லிக்கொண்டு என்ன சாதிச்சோம் ????... இனி என்ன சாதிக்க போகிறோம். ????... ஒன்று படுவோம் நமது உரிமைக்காக போராடுவோம்... உயர்வடைவோம் ,,,,, நமது ஒற்றுமைக்கு தேவையான கருத்துகளையும் , நமது முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துகளையும், நமது வரலாற்று குறிப்புகளையும் இங்கு பதிவு செய்யுங்கள்..... நம் இன மக்களுக்கு வேலை வாய்ப்பிற்கும், கல்விக்கும் உதவி செய்யுங்கள்.... வன்கொடுமை சட்டத்தை நீக்க நம் அமைப்பின் சார்பில் பல போராட்டம் நடத்தியுள்ளோம்.... இந்த சட்டத்தினால் பாதிக்கப்படும் நம் உறவுகளுக்கு கண்டிப்பாக எப்போதும் துணை நிற்ப்போம்.... நாங்களோ எங்கள் தலைவரோ பெரிய பணக்காரர்கள் அல்ல... ஆனால் எங்களால் முடிந்தவரை தேவரினத்துக்காக போராடுவோம்... அவசியம் ஏற்பட்டால் எங்கள் உயிரையும் தேவரினத்திற்க்காக கொடுப்போம்... நம் அமைப்பு நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.... நீங்கள் இந்த அமைப்பில் இல்லையென்றாலும், இந்த அமைப்பிற்கும் நம் இனத்திற்கும் துணையாக இருக்கவேண்டும் என கேட்டுகொள்கிறோம்... நம் மக்களுக்கு முக்குலத்தின் ஒற்றுமையை ஏற்படுத்த உணர்த்துவோம்... நமக்குள் இருக்கும் போட்டி பொறாமையை ஒழிப்போம்........ இதன் தலைவர் முக்குலத்தின் காவலர் அஞ்சா நெஞ்சன் திரு ஆறு. சரவணன் தேவர் அவர்கள்... தன்னலம் இல்லாதவர், நம் இன மக்களுக்காக தன் உயிரையும் துச்சமாக மதிக்க கூடியவர்..... நம் அமைப்பினால் நடத்தப்படும் இந்த குழுமத்தின் விதிகள் ; தனிப்பட்ட உள்பிரிவை போற்றுவதற்கும் , தூற்றுவதர்க்கும் இங்கே அனுமதி இல்லை நமது ஒற்றுமைக்கு தேவையான அனைத்து கருத்தையும் இங்கே பதியலாம் பிரிவினைக்கு காரணமாக அமையும் எந்த கருத்துக்கும் இங்கே அனுமதி கிடையாது நம் இனத்தின் ஒற்றுமைக்கு தேவையான அரசியல் பதிவுகள் மட்டுமே இங்கே ஏற்கப்படும் நம் இனத்தில் உள்ள தனிப்பட்ட ஒருவரின் சண்டையை இங்கே பதிய வேண்டாம் இங்கு வந்தால் அனைவரும் தேவரே ... ஆபாச வார்த்தைகள் ,சொந்தங்களை புண்படுத்தும் வார்த்தைகள் நீக்கப்படும் ... தேவர் இனத்தின் தலைவர்கள் யாரையும் விமர்சிக்க வேண்டாம் ...உள்பிரிவை தூக்கி பிடிக்கும் எந்த குழுமத்தின் செயல்பாடையும் இங்கே பகிர வேண்டாம் தெரிந்தே ,வேண்டும் என்றே இங்கே தவறு பண்ணுறவங்களுக்கு ஒரு முறையும் ,தெரியாமல் தவறு பண்ணுறவங்களுக்கு மூன்று முறை எச்சரிக்கை கொடுப்போம் ..மீறினால் குழுமத்தில் இருந்து நீக்கப்படுவார்கள்..... கட்டுப்பாடு இருக்க குழுமம் தான் ஒற்றுமையோடு இருக்கும் ....இங்கையாவது ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதால் தான் இவ்வளவு கட்டுப்பாடு .. உள்ப்பிரிவை வைத்து இங்கே பதிந்தால் அது முக்கியமான பதிவோ ,நல்ல பதிவோ எப்படி இருந்தாலும் ,யாரு பதிந்தாலும் உடனே நீக்கப்படும் . இதில் எந்த மாற்றமும் இல்லை வரலாறை சொல்லும்போது தேவர் [ உள்ப்பிரிவு] இப்படி பதியலாம் ...மற்றபடி எந்த காரணத்திற்கும் நமது உள்ப்பிரிவை இங்கு பயன்படுத்த வேண்டாம் நமது கொள்கைகள் மற்றும் நம் கோரிக்கைகளில் முக்கியமானது >>>>>; முக்குலத்தோரை தேவர் இனமாக அறிவித்து ஒரே வகுப்பின் கீழ் கொண்டுவரவேண்டும் . மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் அய்யாவின் பெயரை வைக்க வேண்டும் . தேவர் ஜெயந்தியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் .. தேவர் அய்யாவின் படத்தை அனைத்து எல்லா அரசு அலுவலங்களிலும் வைக்க வேண்டும் . அனுமதி கேட்ட இடத்தில உடனே தேவர் அய்யா சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் தேவர் இனத்தை மிகவும் பின்தங்கியோர் பட்டியலில் கொண்டுவர வேண்டும் ... பசும்பொன் தேவர் அய்யா , மருது பாண்டியர், பூலித்தேவன் , வேலு நாச்சியார் ஆகியோரின் நாட்டுப்பற்றையும், விடுதலை போராட்டத்தையும் பள்ளி பாட புத்தகத்தில் சேர்க்க வேண்டும் நம் முன்னோர்கள் மூவேந்தர்கள் சேர சோழ பாண்டியர்கள் ஆசிகளோடு , பசும்பொன் தேவர் அய்யா , மாவீரர் புலிதேவன் ,மாமன்னர் இராஜா ராஜா சோழன் தேவர் , மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் , வீர தாய் வேலு நாச்சியார் ,மூக்கையா தேவர் ஆகிய நம் முக்குலத்து தெய்வங்கள் ஆசிகளோடும் வாருங்கள் நம் தேவர் இனம் காப்போம் .... வாழ்க நம் முக்குலம் .. வளர்க நம் ஒற்றுமை ... ஒற்றுமையோடு இருப்போம் தேவர் இனம் காப்போம் நிமிர்ந்து நில் ,துணிந்து செல்..போராடு இது நாம் ஆண்ட பூமி நம்மை அடக்க முடியாது நம் உரிமைகளை தடுக்கும் அதிகாரம் எவனுக்கும் இல்லை ஒன்றுபடுவோம் நம் உரிமைக்காக போராடுவோம் உயர்வடைவோம் சொந்தங்கள் அனைவரின் புரிதலுக்கும் நன்றி

மருது பாண்டியர் கூட்டமைப்பு


மருதுபாண்டியர் கூட்டமைப்பு என்பது சின்ன மருது தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றிய போராளிகளின் கூட்டமைப்பைக் குறிக்கும்.

வரலாறு

வணிக நோக்கோடு தென்னிந்தியாவில் காலூன்றிய பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியார் தென்னிந்தியாவில் பாளயக்காரர்களுக்கு இடையே பிரித்தாளும் சூழ்ச்சியினைக் கையாண்டனர்.
முதல் பலிக்காடாவாக ஆனவர் ஆற்காடு நவாப். நவாபுக்கு இதுகாறும் கப்பம் செலுத்திவந்த தமிழக பாளையப்பட்டுக்கள் ஆங்கிலேயர்களின்கொ
டுங்கோன்மைச் சுரண்டலுக்கு இரையாகின. பிரித்தானிய எதிர்ப்பு, ஓர் இயக்கமாக இல்லாவிடிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வேர் விட்டுக்கொண்டிருந்த நேரம்.
1799 ஆம் ஆண்டு பிரித்தானியர் எதிர்ப்புப் புரட்சியில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டது. திருநெல்வேலியும் மைசூரும் அன்னிய ஆதிக்கத்திற்கு இரையாயின. ஆங்கிலேயர்கள் பெற்ற இவ்வெற்றி தேசியப் போராட்டத்திற்கு மரண அடியாக அமையவில்லை. பிரித்தானிய எதிர்ப்பு அமைப்புகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாகவே அமைந்தது. தென்னிந்தியாவின் வட பகுதியில் திப்பு சுல்த்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்து வீர மரணம் எய்திய செய்தியும், கட்டபொம்மனுடைய வீர மரணமும் ஒருங்கிணைந்த தேசிய உணர்ச்சியைத் தென்னிந்தியா முழுமையும் பரவக் காரணமாக அமைந்தன.

கூட்டமைப்பு

பாஞ்சாலங்குறிச்சியின் அழிவுக்குப்பின்னால் பிரித்தானிய எதிர்ப்புப் போராளிகள் ஆங்கிலேயர்களின் கடுமையான தண்டனைகளுக்கு அஞ்சிசிவகங்கைச்சீமையின் அடர்ந்தக் காட்டுப் பகுதியான காளையார்கோவில் காடுகளில் தஞ்சமடைந்ததுடன் அங்கு ஏற்கனவே இருந்த புரட்சிக் கூட்டமைப்போடு இணைந்து கொண்டனர். மைசூரின் வீழ்ச்சியை அடுத்து மேற்குப் பகுதியிலிருந்த போராளிகளும் இப்பாதுகாப்பான காளையார் கோவில் காட்டுப் பகுதிக்கே வந்து தஞ்சமடைந்தனர்.
காளையார்கோவில் காட்டுப் பகுதியானது மானாமதுரை, சாக்கோட்டை, சிங்கம்புணரி ஆகிய இடங்கள் வரையில் சுமார் 50 மைல் சுற்றளவுக்குப் பரவியிருந்தது. அடர்ந்த காட்டுப் பகுதி இது. தற்போது பேசப்படும் கெரில்லாப் போர் தந்திரங்களுக்குத் தகுதியான வனப்பகுதி. இதனிடையே கிராமங்களோ, விவசாய நிலங்களோ இல்லை. இங்குள்ள மரங்கள் எல்லாம் வலுவானவை, தரையோடு படர்ந்துள்ள மரங்களும் அதிகம். மருதிருவரின் படைவீரர்களால் காக்கப்பட்டு மாற்றார் அணுகா வண்ணம் அமைந்திட்ட இப்பகுதி மைசூர் திருநெல்வேலி வீழ்ச்சிக்குப் பின்னால் போராளிக் குழுக்களின் நடவடிக்கைக்கு மையமாக அமைந்தது.
பிரித்தானிய ஆதிக்கத்திற்கு எதிரான சக்திகள் ஓர் இயற்கை இயக்கமாக உருமாற்றம் அடையக் காரண கர்த்தா சின்ன மருதுபாண்டியர் ஆவார். மருதுபாண்டியரின் அருகாமை, போராளிக் குழுக்களுக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால் இயக்க எதிர்ப்பானது உன்னதமான உயிர்த் தியாகங்களுக்கு தயாராக இருந்த வீரர் படையைப் பெற்றிருக்கமுடியாது.
சின்ன மருதுபாண்டியர் ஆங்க்கிலேயரின் பலவீனத்தை நன்கு அறிந்த ராஜ தந்திரியாவார். ஒரு பாளையத்திற்குமேல் இரண்டு பாளையங்கள் சரியானபடி முழுமூச்சாக எதிர்த்தாற்கூட ஆங்கிலேயர் தாக்குப்பிடிக்க மாட்டார்கள். இதை உணர்ந்துதான் சின்ன மருது கூட்டமைப்பைக் கூட்டத் தொடங்கினார். ஆனால் ஆங்கிலேயர் தம் நோக்கம் நிறைவேறப் பாளையங்களை ஒன்று சேரவிடாமல் அவர்களுக்குள் சிண்டு முடிந்தனர்.
வெல்லற்கரிய அவ்வீரர் அடுத்துச் செய்தது, போராளிக் குழுமங்களை ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளச் செய்த்தாகும். கிராமங்களின் நாட்டாமைகளுக்கும் பாளையங்களின் தலைவர்களுக்கும் தூதுவர்களை அனுப்பி புரட்சி இயக்கச் செய்தியைக் கொண்டு செல்லவைத்தார். அக்கூட்டமைப்புக்கள் மிகத்திறமையான தலைவர்களின் கீழ் திரைமறைவில் இரகசியமாக இயங்கத்தொடங்கின.
தென்னகத்தின் விடுதலைப் போராளிகளின் கழகங்கள் அல்லது கூட்டமைப்புக்கள் எவ்வாறு ஒரு கட்டுக்கோப்புக்குள், ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சிறந்த தலைமையின் கீழ் இயங்கின என்பதைக் காட்டும்.
தஞ்சைப்பகுதி:- ஞானமுத்து
இராமநாதபுரம் பகுதி :- மயிலப்பன், சிங்கம் செட்டி,முத்துகருப்பர்
மதுரை மற்றும் சிவகங்கைப் பகுதி :- மருதிருவர்
திண்டுக்கல் மற்றும் திருச்சிப் பகுதி :- விருப்பாட்சி கோபால நாயக்கர்
கோவை மற்றும் சேலம் பகுதி :- கானிஜா கான்
வட கேரளம் ( மலபார் ):- கேரள வர்மன் ( பழசி ராஜா )
மேற்கு மைசூர் :- கிருஷ்ணப்ப நாயக்கர்
வட கன்னடம் மற்றும் அதன் வடபாலுள்ள பகுதிகள் :- தூண்டாஜி வாக்
இவற்றில் இராமநாதப் போராளிகள், தஞ்சைப் போராளிகள், சிவகிரிப் பாளையக்காரரின் மைந்தன் மாப்பிள்ளை வன்னியன் தலைமையிலான மேற்கு நெல்லைப் போராளிகளின் கூட்டுக் குழுக்கள் சின்ன மருதுவின் தலைமையை ஏற்றன. கிழக்கு நெல்லைப் போராளிகளின் கழகத் தலைவரான கட்டபொம்மனுக்கு உந்து சக்தியாக விளங்கியவரே சின்ன மருதுதான்.

No comments:

Post a Comment